கிழக்கு ஆளுநர் விவகாரம்: தகவல் கசிந்தது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அவருடைய பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமானை ஊவா மாகாண ஆளுநராக நியமித்து விட்டு , அதற்கு பதிலாக ஹாபிஸ் நஸீரை கிழக்கு ஆளுனராக,ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

எனினும், அடுத்த தேர்தல் வரை கிழக்கு ஆளுநர்  உள்ளிட்ட ஆளுநர்  பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.