‘கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை’

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்​கை எடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, குற்றம் சுமத்தியுள்ளார். பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடைபெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளதைபோல, கறுப்பு ஜூலை இடம்பெற்றும் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.