“சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம்” ஜனாதிபதி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,  அமைச்சுப் பதவி என்பது பாரியதொரு பாக்கியம் அல்ல என்றும், அது பெரும் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் என்ற முறையில் சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் திறமையாகவும், தூய்மையான நிர்வாகத்தை நோக்கியும் பணியாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன், என்றார்.

அரச நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஊழலை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி மேலும் கோரிக்கை விடுத்தார். மேலும் பொதுச் சேவைக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும் கூறினார்.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச நிறுவனங்களை சீர்படுத்துவது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி   மேலும் தெரிவித்தார்.