சவேந்திர சில்வாவின் கோரிக்கை

நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நேற்று (09) கொழும்பில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே சவேந்திர சில்வா மக்களிடம் இவ்வாறு விடுத்துள்ளார்.