நேற்று (05) பிற்பகல் சிறைக்கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 33 பேர் காயமடைந்திருந்தனர். இன்று அதிகாலை நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று முற்பகல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்குவர்.