ஜா- எல பகுதியில் தொற்று அதிகரிப்பு

கட்டுநாயக்க- சீதுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஐவர் இன்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இவர்கள் ஜா- எல பிரதேசத்திலுள்ள விவசாய உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நிறுவன ஊழியர்கள் 41 பேர் நேற்றைய தினமும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.