204 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை

உக்ரைனில் இருந்து மேலும் 204 சுற்றுலா பயணிகள் இன்று(29) மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரைனில் இருந்து 180 சுற்றுலா பயணிகள் நேற்று நாட்டுக்கு வருகைதந்திருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் பெந்தோட்டை மற்றும் கொக்கல ஆகிய பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.