தமிழர்களின் பிரச்சினை தீர வேண்டுமென்பதில் கூட்டமைப்புக்கு அக்கறையே இல்லை: முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கடும் சாடல்

தமிழ்மக்களின் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவொரு உண்மையான அக்கறையுமில்லை. தமிழர்களின் பிரச்சினை தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் காணப்பட வேண்டுமென்பதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் கடுமையாக சாடியுள்ளார்.