வடக்கு நைஜரின் சஹாரா பாலைவனப் பிராந்தியத்திலுள்ள பகுதியொன்றில், ஆகக்குறைந்தது 49 பேர் “தாகத்தினால் துடிதுடித்து” உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த லொறி (Truck) பழுதடைந்ததை அடுத்து, பல நாட்களாகப் பாலைவனத்தில் தவித்த நிலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.