திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தில்

 

திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தில் மாவட்ட அமைப்பாளர் சத்தியன் தலைமையில் “கல்வி சேவை” என்னும் நிகழ்வில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகப்பை , கற்றலுக்கான உபகரணங்கள் 17/01/2016 அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜபெருமாள், பத்மநாபா E.P.R.L.F பொது செயலாளர் ஸ்ரீதரன், யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் , தோழர் கிருபா மற்றும் திருமலை தோழர்களும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் வழங்கப்பட்ட கற்றலுக்கான உபகரணங்களால் நூற்று கணக்கான பாடசாலை மாணவர்கள் நன்மை அடைந்ததனால் வறுமை நிலையிலுள்ள பெற்றோர்களின் சுமைகளும் குறைக்கப்பட்டன. இவ் நிகழ்வு மலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.