தோழர் மகாநாம

தோழர் மகாநாம இப்புவியிலிருந்து சென்று விட்டார் என்ற செய்தியைப் பார்த்து இடிந்து போனேன். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தோழர் நாபா தலைமையில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோர் சாதனையைப் படைப்பதற்கு கொழும்பில் துணிவோடு தளம் தந்து, எமக்கு எல்லா வகையிலும் தன்னால் முடிந்த அளவு துணையாக நின்றவர் தோழர் மகாநாம. இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது ஈழ மக்களின் அரசியல் வரலாற்றிலும் தோழர் மகாநாம பின்னிப் பிணைந்த பாத்திரத்தை வகித்தவர். அவரது இறுதிப் பயணத்தில் சென்று வா தோழா என தலைதாழ்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வணங்குகிறேன்.