நெருக்கடியின் உச்சத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக பெறுபேறுகளைத் தருவதாக சனல் நியூஸ் ஆசியாவிற்கு அளித்த பேட்டியில் வீரசிங்க கூறினார்.
“ஒரு நாடு ஒரு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க அதே நிலைக்குத் திரும்ப நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் விஷயத்தில், மூன்று ஆண்டுகளுக்குள், நாங்கள் கிட்டத்தட்ட அங்கு சென்றுவிட்டோம்,” என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.
“அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வருமானம், வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். அதாவது, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.