நுவரெலியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்கள் மூடி ஆதரவினை வழங்கினர்.

மேலும் இராகலை நகரில் கருப்பு கொடிகளை பறக்கவிட்டு மரக்கறி கொள்வனவாளர்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

மரக்கறி விவசாயிகள்,வர்த்தகர்கள்,மற்றும் மரக்கறி தோட்டங்களில் தினக்கூலிகளாக பணியாற்றுவோர் தொழில் முடக்கத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

நகரில் எவ்வித பதற்றமும் ஏற்படாத நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அத்துடன், நேற்று நுவரெலியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மரக்கறிகள் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.