நெடுந்தீவில் ஐவர் படுகொலை: வெளிநாட்டவர் காயம்

வீட்டின் உரிமையாளர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என்று ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை (22) அதிகாலை இந்த வாள்வெட்டு தாக்குதல்  நடத்தப்பட்டுள்ள நிலையில்,  வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.