பயணிகள் இல்லாததால் ரயில் சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 8.53 மணிக்கு அம்பேபுஸ வரை பயணிக்கும் ரயிலும் காலை 8.45 மணிக்கு களுத்துறை வரை பயணிக்கும் ரயிலும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த இரண்டு ரயில்களும் பயணிக்க போதுமான பயணிகள் இல்லாததால் சேவையிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.