பஸ் தீப்பற்றி எரிந்ததில் 45 பேர் உயிரிழப்பு

நேன்றைய தினம்(23)   அதிகாலை 2 மணியளவில் துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா (Macedonia) நோக்கி பல்கேரியா வழியாக பயணித்த பஸ் ஒன்றே  இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணித்த இப்பஸ்ஸில் தீயில் கருகி 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இவ்விபத்தானது எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விசாரணைகள்  இடம்பெற்று வருகின்றன.