புதிய பாதையில் இலங்கை-இந்திய உறவுகள்

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கையும் இந்தியாவும் புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மன்றத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை நேற்று மாலை இந்தியாவில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இந்திய மன்றத்தின் தர்மேந்தர் பிரதாப், இந்திய இராஜாங்க அமைச்சர் ஜித்தேந்ரா சிங், பாரத ஜனதாக் கட்சியில் செயலாளர் ராம் மாதவ், இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.