பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து, வெதுப்பக (Bakery) மற்றும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல உணவக மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதைய சூழலில் விலைகளை அதிகரிக்காமல் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.