“பொருளாதார மத்திய நிலையம்; நிபுணர் ஆலோசனை பெற்றே இறுதி தீர்மானம்”

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததுள்ளார்.

பொருளாதார மையம், மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையப்போவது எல்லோரும் அறிந்ததே. மாங்குளத்தில் கடல் உணவு சம்பந்தமான சந்தையும், வவுனியா மதகுவைத்தகுளத்தில் மரக்கறிச் சந்தையும் நிறுவப்படும் என்ற செய்தி மக்களிடையே பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமான ஆலோசனைகள், பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன.

எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமான தீர்மானம், ஆலோசனைகள் பெற்ற பின்னர் எம்மால் எடுக்கப்படும். தீர்மானம் எடுக்கப்படாத ஒரு விடயம் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.