போராட்டம் நான்கு வருட நிறைவை எட்டியது

இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று மதியம் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்து வருடங்களை எட்டுவதாகவும் தமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் கூறினர்.

“எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.

“எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம்” என்றனர்.