மண்சரிவால் ஒன்பது பேர் பலியானர்

பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பாறைகள் விழுந்தன. இதேவேளை,ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒன்பது பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரை பொலிஸார்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளார்.