மண்சரிவால் ஒன்பது பேர் பலியானர்

ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்  அகப்பட்டு  ஒன்பது பேர் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் சாங்லா மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலா பயணிகள்  குவிந்து காணப்பட்டனர்.  அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு வந்தன. மேகமூட்டமாக இருந்ததால் கீழே பாலத்தில் நின்றிருந்த பயணிகளுக்குத் தெரியவில்லை.