மதுரை கரோனா கண்காணிப்பு அதிகாரி திடீர் மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி.யின் புகார்தான் காரணமா?

கரோனா பரவல் தடுப்புப் பணிக்காக 33 மாவட்டங்களுக்கும் 33 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி.யே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.