மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா

மாலைத்தீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபுதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.