மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் மீண்டும் வரிசை….

மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்ய வேண்டும் என்று தெரிவத்த அமைச்சர், செப்டம்பர் வரை நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

ஜனவரி மாதம் மட்டும் மின்சார விநியோகத்துக்கான நிலக்கரிக்கு 384 கோடி ரூபாய் தேவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகளின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு 50 கோடி ரூபாய் பெறுமதியான எரிபொருள் தேவைப்படுகின்ற நிலையில் தற்போது அதனை வழங்க முடியாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.