மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் மீண்டும் வரிசை….

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் இலங்கை மின்சார சபைக்கு 350 கோடி ரூபாய் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.