மியான்மாரில் அவசர நிலை அமுல்

மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் இராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.