முதல் முறையாக சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்வு

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.