‘முழந்தாலிடல் விவகாரம்’: விசாரணைகள் ஆரம்பம்

ஏறாவூர் பிரதேசத்தில் நேற்றைய தினம், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடுகளை விட்டு வெளியே சென்ற சிலர், இராணுவத்தினரால் முழந்தாழிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இதனுடன் தொடர்புடைய, இராணுவ வீரர்கள் கடமைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.