முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இராஜினாமா

சகல முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் என அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார். ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.