விளையாட்டு தொடர்பான ஊழல்கள் குறித்த தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்:
“விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் (Prevention of Offences Relating to Sports Act) கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்சமயம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தனர்.