யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளன​ர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.