யாழ். மரக்கறி சந்தை தொகுதிக்குப் பூட்டு

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதியில், எழுமாறாக 60 பேரிடம் நேற்று (23) பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டதில், 9 வியாபாரிகளுக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த தொற்றாளர்களில் 6 பேர், உள்ளூர் உற்பத்திப் பொருள் (பனம் பொருள்கள்) வியாபாரிகள் எனவும் மூன்று பேர் மரக்கறி வியாபாரிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இன்றைய தினம் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.