முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைது செய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யத் தயாரானபோது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.