வடக்கு மக்களுக்கு நீர்

யாழ்ப்பாணத்தின் எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள், உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் கீழ் நீரைப் பெற்றுக்கொள்ளளுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐயகுணரத்ன, இன்று ஆரம்பித்து வைத்தார். எழுவைத் தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில், கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே, இந்த நன்னீராக்கும் திட்டம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு நன்னீராக்கும் திட்டங்களும், 7.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.