‘வன்னி பல்கலைக்கழகம்’ விரைவில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு ‘வன்னி பல்கலைக்கழகம்’ என பெயரிடப்படுமெனவும், உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (15) பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்​போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.பல்கலையின் வவுனியா வளாகமே, வன்னி பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளது.