கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) என்பவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரி, அதனை 20 கோடியாகக் குறைத்து, இறுதியில் 12 கோடி ரூபாவை அவரது மனைவியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.