வினைதிறனை வெளிப்படுத்த முதல்வர் முடிவு!!!

வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ .சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தமது சார்பாக. வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பிரதேச செயலகப்பகுதிக்கு ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களே இனிமேல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உரிய அபிவிருத்தி ,ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை சார்பாக முன்னெடுப்பார்கள் எனவும், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை மட்டுமே தம்மிடம் நேரில் முறையிடுமாறும் தெரிவித்துள்ளார். இச் செயற்பாட்டின் மூலம் வடமாகாணத்திற்குட்பட்ட ஒவ்வொரு பிரதேசசெயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறை சார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் அணுகி வட மாகாண சபையால் செயற் படுத்த முடியும் என எதிர்பார்க்கபடுகின்றது..