விலைகள் விரைவில் குறையும் சாத்தியம்?

எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  திறந்த கணக்கின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர்  நளின் பெர்னாண்டோ, சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.