‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்’

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது மக்களை வாழ விடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.