வெள்ளை அங்கிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதப் பாதிரி இம்மானுவல் அவர்களுக்கு, ஜனாதிபதி, இலங்கை வருமாறு அழைப்பு!

இலங்கை ஜனாதிபதி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உலகத் தமிழர் மேரமைப்பின் தலைவர் இம்மானுவல் அவர்களை இலங்கைக்கு வருமாறு அவசர அழைப்பினை விடுத்துள்ளனர். இவர்களது அழைப்பு தொடர்பில் இலங்கையில் இருக்கக்கூடிய இடதுசாரிகள் கட்சிகளின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு உலகத் தைழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவல் மின்னஞ்சல் மூலமாக இவ் அழைப்பினை தெரியப்படுத்தியுள்ளார். அதில் மேற்குறிப்பிடப்பட்ட அழைப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் தென்னிலங்கையில் உள்ள மிதவாதிகளுடன் இணைந்து கடமையாற்ற நான் ஆர்வமாக உள்ளேன் என்றும் குறைந்தது அரசியல்வாதிகளின் பொய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு இலங்கை நோக்கி வருவதனை அதிகமாக பரிசீலனை செய்துகொண்டு இருக்கிறேன் என்றும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இம்மானுவல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த விக்கிரமபாகு அருட்தந்தை அவர்களே உங்கள் வரவினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அருட்தந்தை இம்மானுவல் அவர்கள் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழலை எடுத்து இலங்கை செல்லமுடியாத நிலையில் ஜேர்மனியில் நீண்ட காலமாக வசித்துவருவதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்பை பேணி வந்தமையால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்ட நானூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள்இ மற்றும் தனிநபர்கள் பெயர்ப்பட்டியலில் அருட்தந்தை இம்மானுவல் அவர்களின் பெயரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஆட்சியாளர்களால் அதிகமாக விமர்சனத்துக்குள்ளாகியிருந்த இவருக்கு இலங்கையின் தற்போதைய தேசிய அரசாங்கம் மின்னஞ்சலினூடாக விடுத்த இவ் அவசர அழைப்பு எதற்காக….?போகும் இடமெல்லாம் புலிகளுக்காக பொய்ப் பிரச்சாரம் செய்து வந்த புலிப்பாதிரிக்கு இப்போ புது வேடம் கிடைக்கப் போகிறது.