10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மேற்குறிப்பிட்ட குழப்பம், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.