100 நாட்களைக் கடந்த போராட்ட களம் அகற்றப்பட்டது

எதிர்வரும் நாட்களில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹெர உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், போராட்ட களத்தை அகற்றுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராட்ட கள செயற்பாட்டாளரான திமுது அபேகோன் கருத்து தெரிவிக்கையில், தற்காலிகமாக இந்த களத்தை அகற்றியுள்ளதாகவும் எதிர்காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் மக்கள் எதிர்ப்பு ஆட்சியை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான போராட்ட களமொன்று உருவாக்கப்படும் என்றார்.