13 ஆவது திருத்தம்; இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று (28)  காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.