1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது

2026 வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது 1,350 ரூபாவாக நிலவும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 400 ரூபாய் அதிகரிப்பில் 200 ரூபாவினை அந்தந்த பிராந்திய தோட்ட நிறுவனங்களும், எஞ்சிய 200 ரூபாவினை அரசாங்கமும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.