19 நாள்களில் இராஜினாமா செய்த ஈக்குவடோர் சுகாதாரமைச்சர்

கடுமையாக தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாக, தனது இராஜினாமா கடிதத்தில் பர்டான் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

சுகாதாரமைச்சு, ஈக்குவடோரின் தலைநகர் குயிட்டோவிலுள்ள வைத்தியசாலையொன்றில் தடுப்புமருந்து வழங்கல் தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் தேடுதல் நடத்தியதையடுத்தே குறித்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முதியோரில்லங்களிலுள்ளவர்களுக்கான தடுப்புமருந்துகளை, அரசியல்வாதிகள், கல்வியலாளர்கள், ஊடகவியாளர்கள் பெற்றதாகக் கூறப்படுகிறது.