8 ​NICயுடன் கண்டியில் ஒருவர் கைது

இந்த முறை ரந்தோலி பெரஹெராவைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கூடுதலாக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திங்கட்கிழமை (04)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

பெரஹெராவைப் பார்ப்பது என்ற போலிக்காரணத்தின் கீழ் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் பொதுமக்களிடையே இருப்பதால், சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ்  அதிகாரிக்கு அறிவிக்குமாறும் மூத்த பொலிஸ்  கண்காணிப்பாளர் பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.