சம்பந்தப் பெருமானும், அடியாரும் வாழ்க!

தன்மானத் தமிழன் என்பார்
தானைத் தலைவன் என்பார்
தாய்மானம் காக்க
புறப்பட்ட தனயன் என்பார்
என்மானம் இவருக்கு
உண்டோ? யாம் அறியோம்

(“சம்பந்தப் பெருமானும், அடியாரும் வாழ்க!” தொடர்ந்து வாசிக்க…)

வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்

  • இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை
  • 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்கப் படுத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றை முன்வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட நகல் வரைபு உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களில் விவாதிக்கப்பட்டு மாற்றங்களுடன் கடந்த 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நகல் பிரேரணைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, வடஅயர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

(“வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய சில மாதங்களுக்கு முன்னர் இப்பனிப் போர் ஆரம்பம் ஆகி உள்ளது. உண்மையில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டில் தலைவர் ரவூப் ஹக்கீம் காணப்பட்டார், இதற்கு சுய நல காரணங்கள் இருந்து இருக்க வேண்டும்.

(“மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்!” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்

  • குழப்பத்தை தவிர்க்க ரஷ்ய-அமெரிக்க இராணுவம் அவசர சந்திப்பு

சிரியாவில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் ரஷ்ய இராணுவங்கள் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விருப்பதாக இரு நாடுகளினதும் இராஜதந் திரிகள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப்படும் குழு மீது கடந்த புதனன்று சுமார் 20 ஏவுகணை தாக்குதல்களை நடத்தி யதாக ரஷ்ய பாதுகாப்பு அதிகரிகள் அறிவித்தனர். எனினும் ரஷ்யாவின் இலக்குகள் ஐ.எஸ்ஸை தவிர்த்து சிரிய ஜனாதிபதி அஸாத்தின் எதிர்த்தரப்பினராக இருக்கக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் வெளி யிட்டுள்ளது. அமெரிக்காவும் ஐ.எஸ். மீது ஈராக் மற்றும் சிரியாவில் வான் தாக்குதல் களை நடத்தி வருகிறது.

(“ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்” தொடர்ந்து வாசிக்க…)