சி.வி. தலைமையில் அரசியலமைப்பு முன்மொழிவு குழு

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில், வட மகாணசபை உறுப்பினர்கள் 19 பேரைக் கொண்ட அரசியலமைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதன் மூலம், வட மகாணத்தில் வசிக்கும் பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகளின் யோசனைகனை பெற்று, அதன் மூலம் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக இணைத்துக் கொள்ளும் பொருட்டான முன்மொழிவுகளை உருவாக்கி, மாகாணசபையின் அனுமதியைப் பெற்று, அரசியலமைப்பு சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் 44 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (26) யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றபோது, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு

புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

(“கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பாதுகாப்புப் படையினர், 7 மாணவப் படையணியின் அதிகாரிகள் உட்பட 438 மாணவ படையணியினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

(“சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !” தொடர்ந்து வாசிக்க…)

‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

உலகை அச்சுறுத்தி வரும் ‘ஜிகா’ வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3,500 குழந்தைகள் இதுபோல் பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

(“‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் இணக்கம்.

புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும் குறிப்பாக அமெரிக்கா இலண்டன் சுவிஸ் கனடா ஜேர்மனி பிரான்ஸ் நோர்வே மற்றும் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளிலும் இருக்கும் கட்சியின் அமைப்பாளர்களுக்கு விடுத்துள்ள உட்சுற்று அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

(“டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் இணக்கம்.” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்திலான ஜனநாயகக் கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் தமது உடன்படிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

(“ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!” தொடர்ந்து வாசிக்க…)

புலி – மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம்

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

(“புலி – மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம்” தொடர்ந்து வாசிக்க…)

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும். தந்தை செல்வா தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளைக் கோரி அஹிம்சை வழிப் பயணம் மேற்கொண்டார். போராட்டங்கள் எல்லாம் உடனடியாக பயன் தராது போனாலும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய நடவடிக்கைகளை அவர் மரணிக்கும் வரைக்கும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் முன்னெடுத்து வந்தார்.

(“மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!” தொடர்ந்து வாசிக்க…)

அறுவடைக் காலம்?

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து வைத்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

(“அறுவடைக் காலம்?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!

கடந்த ஞாயிறன்று இலங்கை அரசின் நீர்ப்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சூழ இரண்டு கிலோ மீட்டர் பகுதியளவில் நீர் நச்சாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அந்த நீரை அருந்த முடியாது எனவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் மறுபக்கத்தில் நீர் நஞ்சாக்கப்பட்டமைக்கான தீர்வு இரணை மடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் திட்டமே எனக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நீர் மட்டும் நஞ்சாகவில்லை விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்களும் பச்சை மரங்களும் பட்டுப்போகின்றன.

(“வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!” தொடர்ந்து வாசிக்க…)