அனர்த்தங்களின் பின்னரான நோய்களிலிருந்து எவ்வாறு தப்புவது?

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை, தற்போது சற்றுத் தணிந்துள்ள நிலையில், அவ்வாறான அனர்த்தங்களின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டுமாயின், சில நடைமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

(“அனர்த்தங்களின் பின்னரான நோய்களிலிருந்து எவ்வாறு தப்புவது?” தொடர்ந்து வாசிக்க…)

‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’ – டக்ளஸ் தேவானந்தா

“களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்குச் சென்ற என்னை, சிறைக் கூடமொன்றுக்குள் வைத்து கைதிகள் சிலர், பாய்ந்து தாக்கினர்” என, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (01) சாட்சியமளித்தார்.

(“‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’ – டக்ளஸ் தேவானந்தா” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கின் உதவிக்கரங்கள்…

நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றினால் அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள், இன்று பிற்பகல் 2 மணியளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தெற்கை நோக்கிப் புறப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலையீட்டின் கீழ், இந்த நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

மாலி: ஓநாய் அழுத கதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை.

(“மாலி: ஓநாய் அழுத கதை” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை, வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இருவர், படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், தமிழக காவல்துறையினரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், வாள்வெட்டுக் குழுவின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

(“யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம்

அமெரிக்கா வீசாவை எதிர்பார்க்கும் வௌிநாட்டவர்களுக்கு, அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வௌியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இது குறித்த சட்டத்துக்கு, கடந்த 23ஆம் திகதி ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கத்ததால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

(“இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம்” தொடர்ந்து வாசிக்க…)

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை, தனது 80ஆவது வயதில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. பல்வேறு படைப்புகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான், சினிமாவுக்கு பாடல்களை எழுத மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். கவிக்கோவுக்கு, சினிமாவில் இடம் பெறும் குத்துப்பாட்டுகள் பிடிப்பதில்லை.

(“கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

அப்பாத்துரை விநாயகமூர்த்தியை மண்டையில் போட முயன்ற சிவராம்… இப்படிதான் கூட்டமைப்பிற்குள் வந்தது தமிழ் காங்கிரஸ்!!

2000 இற்கு பின்னர் தமிழ் ஜனநாயக கட்சிகளை ஓரணியில் திரட்ட புலிகள் விரும்பினார்கள். கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தார். 2000ம் ஆண்டிலேயே ஆரம்பித்த பேச்சு. ஆரம்ப கட்ட பேச்சுக்களின்போது, இந்த உருவாக்கத்தின் பின்னணியில் புலிகள் இருக்கிறார்கள் என்பதை இயக்கங்கள், கட்சிகளிடம் சொல்லவில்லை. எல்லா கட்சிகளும் ஓரணியில் திரண்டு தமிழ் தேசியத்தை வலியுறுத்துவது தமிழர்களின் நலனுக்கு நல்லது என்ற ரீதியில் பேச்சை நகர்த்தினார்.

(“அப்பாத்துரை விநாயகமூர்த்தியை மண்டையில் போட முயன்ற சிவராம்… இப்படிதான் கூட்டமைப்பிற்குள் வந்தது தமிழ் காங்கிரஸ்!!” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 14)

(அருண் நடேசன்)

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.

(“மே 18 (பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினத்தில் அனைவரும் இணைந்து கொள்வோம்

உலகெங்கும் நடைபெறும் இந்நிகழ்வுகளில் அந்தந்த நாட்டில்வாழும் எமது உறவுகள் போராட்டதிற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்களை நினைவு கூர அணிதிரளுவோம்.
தோழர் தங்க மகேந்திரன் என்ற ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளுடன் எமது அரசியல் வேலைகள் ஆரம்பமானது. ஈழமாணவர் பொது மன்றத்தினூடாக எமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்த காலங்களில் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற வகையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச கல்வியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் நாம் ஆரம்பித்திருந்தோம். கிழக்கில் 1978 ஏற்பட்ட சூறாவளி அனர்த்தங்களைத் தொடரந்து இந்த இலவச வகுப்புக்கள் ஆரம்பமானது தம்பலகாமம் கிளிவெட்டி 1ம் நம்பர் என்று பல இடங்களிலும் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. தோழர் சின்னவன் அன்பு முகுந்தன் கைலன் என பன்முகத்தன்மையுடைய தோழர்கள் தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தனர். தோழர் பீற்ரின் பங்களிப்பை சகல தோழரகளும் அறிவர். தோழர் லிங்கன் போன்ற இளம் தலைமுறையினரும் மகாண சபை காலத்தில் தமது உயிரையும் அர்பணிக்கும் அளவிற்கு செயற்பட்டனர். தோழர் ஜோர்ஜ் சர்வதேச சோசலிச நாடுகளுடனான தனது உறவு மூலம் ஈழவிடுதலைக்கு பலம் சேர்த்தார். வடக்கையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பாரிய தொர்பாடல்களை மட்டக்களப்பு சிறையுடைப்பு காலங்களிலும் போராட்டத்திற்கான வளங்களை இடம்மாற்றம் செய்வதிலும் திருகோணமலை மாவட்டத்தின் பங்கு அளப்பரியது